×

மன்சூர்அலிகான் பாணியில் திருப்புத்தூரில் வாக்கு சேகரிக்கும் சுயேட்சை


திருப்புத்தூர், ஏப். 8: சிவகங்கை பாராளுமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் முகமதுரபீக் வாக்குக் கேட்கும் இடங்களில் சிறிது நேரம் வேலை பார்த்துவிட்டு வாக்களிக்குமாறு கோருகிறார். சிவகங்கையில் விமான நிலையம் அமைக்க முயற்சி செய்வேன் என வாக்குறுதி அளித்துள்ளார்.சிவகங்கைத் தொகுதி பாராளுமன்றத் தேர்தலில் திருப்புத்தூர் ஒருங்கிணைந்த மதநல்லிணக்கக்குழு நிறுவனத் தலைவரான முகமதுரபீக் சுயேட்சையாக ஆட்டோ சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் தனது பிரசார வியூகத்தை நடிகர் மன்சூர்அலிகான் பானியில் செய்து வருகிறார். குறிப்பாக கட்டிடத் தொழிலாளர்களிடம் வாக்குக் கேட்கும் போது அவர்களுடன் சேர்ந்து சிறிதுநேரம் பணி செய்துவிட்டு வாக்குக் கேட்கிறார். தொடர்ந்து பேருந்துநிலைய சிறு வியாபாரிகளிடமும் காலணி தைப்பவர்களிடமும் ஓட்டல்களில் வேலை பார்த்தும் மக்களிடம் வாக்களிக்குமாறு கோருகிறார்.

மேலும் தனது வாக்குறுதியாக சிவகங்கைத் தொகுதியில் விளையாட்டு அரங்கம், ஜவுளித்தொழில் பூங்கா, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம், கலெக்டர் அலுவலகத்தில் வெளிநாட்டில் வேலை தேடிச் சென்றுள்ளவர்களுக்கு சேவை மையம், ரயில்வே வழித்தடம் மற்றும் ஒருபடி மேலே போய் சிவகங்கை மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க வலியுறுத்துவேன்’ என்கிறார்.இவரது வாக்குச் சேகரிக்கும் யுக்தி மற்றும் இவரது கோரிக்கையினை இப்பகுதி மக்கள் வியப்பாகப் பார்க்கின்றனர். மேலும் தனி மனிதனாகவே வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.


Tags : Mansoorale ,
× RELATED ஓய்வூதியம் பெற இ-சேவை மையம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்